மின்வாரிய ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை
திருமயம் |

மின்வாரிய ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை

பொன்னமராவதி அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் அண்ணா துரை (53). திருச்சி மாவட்டம் கல்லுப்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 6 ஆண்டாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவ சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. சம்பவத்தன்று வயிற்று வலி அதிகரிக்கவே, வாழ்க்கையில் விரக்தியடைந்த அண்ணாதுரை விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு