காரை அப்பளம் போல் நொறுக்கிய கோவில் யானை (வீடியோ)

81பார்த்தது
பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தின் எக்மா பகுதியில் தசரா ஊர்வலத்தின் போது யானை ஒன்றிற்கு திடீரென மதம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த சந்தை பகுதிக்கு சென்ற யானை, சாலையில் வந்த கார்களை தூக்கி வீசி சேதப்படுத்தியது. பொம்மைகளை தூக்கி வீசுவதுபோல கார்களை தூக்கி வீசியது. பின்னர் பேருந்தை கவிழ்க்க முயற்சி செய்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி