மின்சாரம் தாக்கி ஒரே நாளில் 4 பேர் பலி

83பார்த்தது
மின்சாரம் தாக்கி ஒரே நாளில் 4 பேர் பலி
தமிழகத்தில் கனமழையால் அறுந்து கிடந்த மின் கம்பிகளை தொட்டு ஒரே நாளில் 4 பேர் பலியாகியுள்ளனர். கடலூரில் 13 வயது சிறுமி மின் கம்பியை மிதித்ததால் பலியானார். மதுரையில் 55 வயதான விவசாயி கணேசன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்மாயில் மின்கம்பி அறுந்து கிடப்பதை அறியாமல் மீன் பிடிக்க சென்றவர் பலியானார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீட்டு கழிவறையில் அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்டதால் முதியவர் குமரேசன்(70) என்பவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி