தஞ்சாவூர் - Thanjavur City

பேராவூரணியில் வரும் 18-ல் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் முகாம்

பேராவூரணியில் வரும் 18-ல் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் முகாம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிய உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை ஒருநாள் முழுவதும் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்று அடைவதை உறுதி செய்து வருகின்றனர். அதனடிப்படையில், வரும் 18ம் தேதி (புதன்கிழமை) அன்று பேராவூரணி வட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் முகாம் மேற்கொண்டு அன்று காலை முதல் கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அன்று மதியம் 2.30 மணியளவில் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டமானது பேராவூரணி வட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அன்று மாலை 4. 30 மணியளவில் பேராவூரணி வட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வந்து அளித்து பயனடையலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా