தஞ்சாவூர் - Thanjavur City

லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை விசித்திரராஜபுரத்தில் வசிப்பவர் அழகர் மகன் அஜித்குமார் (23). சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த இளவரசி என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் சம்பவத்தன்று மளிகை பொருட்கள் வாங்க சாலை ஓரம் நடந்து சென்றார். அப்போது கும்பகோணத்திலிருந்து திருச்சி நோக்கி அதி வேகமாக வந்த கனரக லாரி இவர் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அஜித்குமாரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம்(செப்.16) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் (பொ) உஷா, உதவி ஆய்வாளர் மதிவாணன் ஆகியோர் வழக்குபு பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரியுடன் மாயமான ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా