தஞ்சாவூர் - Thanjavur City

பட்டப்பகலில் செல்போன் வழிப்பறி: சிசிடிவி வெளியாகி பரபரப்பு

தஞ்சை கீழவாசல் ஒயின்ஷாப் அருகே படிமா சந்து பகுதியில் நேற்று முன்தினம் (செப்.8) மாலை ஒருவர் தன்னுடைய செல்போனை பார்த்த படியே வந்து கொண்டு இருந்தார். பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களில் ஒருவர் அவரிடம் இருந்து செல்போனை பறித்துகொண்டு, அவரிடம் பணத்தை எடு என கூறினான். ஆனால் லாவகமாக எதற்காக எனது செல்போனை பறித்தாய் என அவனது சட்டையை செல்போன் உரிமையாளர் பிடித்து இழுத்து மல்லுக்கட்ட, இருவர் இடையே சண்டை ஏற்ப்பட்டது. இதில் செல்போனை பறித்த நபர் தான் அணிந்து இருந்த டீ சர்டை களட்டி துண்ட காணோம், துணிய காணோம்‌ என அவரிடம் இருந்து தப்பினார். பின்னர் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றார்‌. பட்ட பகலில் இரண்டு இளைஞர்கள் துணிகரமாக செல்போன்‌ பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా