தஞ்சை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

68பார்த்தது
தஞ்சை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தஞ்சை அருகே குருங்குளம் மேட்டுப்பட்டி தெற்குத்தெருவை சேர்ந்தவர் பாலகுரு. இவருடைய மனைவி மோகனாம்பாள் (வயது 29). இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று குடும்பத் தகராறு காரணமாக மோகனாம்பாள் வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகனாம்பாள் இறந்தார். இந்த நிலையில் மோகனாம்பாளின் தாய் செல்லம்மாள் தனது மகள் சாவில் மர்மம் உள்ளது என்று வல்லம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோகனாம்பாளுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி