குளிர்பானத்தால் சிறுமி உயிரிழக்கவில்லை.. திடீர் திருப்பம்

76பார்த்தது
குளிர்பானத்தால் சிறுமி உயிரிழக்கவில்லை.. திடீர் திருப்பம்
செய்யாறு அருகே சிறுமி உயிரிழந்ததற்கு குளிர்பானம் குடித்தது காரணமல்ல என ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. கனிக்கிலுப்பை கிராமத்தில் ராஜ்குமார் என்பவரது மகள் காவ்யா (5) குளிர்பானம் குடித்ததால் உயிரிழப்பு என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குளிர்பானம் குடித்ததால் சிறுமி இறக்கவில்லை என சென்னையில் உள்ள தேசிய உணவு ஆய்வக அறிக்கை சான்றளித்துள்ளது. அவதூறு ஏற்படுத்தியாக சிறுமியின் பெற்றோர் மீது குளிர்பான நிறுவனம் புகார் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி