சூலூர் - Sulur

சாலையோரம் இறந்து கிடந்த மான் - வனத்துறையினர் விசாரனை!

சாலையோரம் இறந்து கிடந்த மான் - வனத்துறையினர் விசாரனை!

கருமத்தம்பட்டி அருகே இறந்து கிடந்த மான் சடலத்தை வனத்துறையினர் நேற்று (செப்.,20) மீட்டனர். கருமத்தம்பட்டியை அடுத்த அரசு போக்குவரத்து கழக டிப்போ எதிரில் அவிநாசி ரோட்டை ஒட்டி, மான் இறந்து கிடந்தது. அவ்வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வனத்துறைக்கு நேற்று (செப்.,20) தகவல் அளித்தனர். அங்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் மானின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். வாகனத்தில் அடிபட்டு இறந்ததா அல்லது நாய் கடித்து இறந்ததா என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా