
திருச்செங்கோடு: திருமாங்கல்யம் தாலி கயிறு அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சின்ன ஓங்காளியம்மன் திருகோவிலில் இன்று திருமாங்கல்யம் தாலி கயிறு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.