ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளார். அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் அவர், திரிகோணமலை அருகே அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் நிலையத்தை திறந்து வைக்கிறார். அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி அமர சூரியா உள்ளிட்டோரை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது தமிழ்நாட்டு மீனவர்கள் கைது, மீனவர்கள் பிரச்சனை குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.