
சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கியூஆர் குறியீட்டுடன் நோட்டீஸ்
முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கியூஆர் குறியீட்டுடன் நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நீண்டகாலமாக வரி பாக்கி வைத்துள்ள 2 லட்சம் வணிக கட்டடங்கள், அடுக்குமாடி கட்டடங்களில் இருப்பவர்கள் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து வரியை செலுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.