தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், தேனி, தென்காசி, கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.