
மதுரை: காமராஜர் உறுப்புக் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு
மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பொருளாதார துறையின் மதிய நேர பிரிவில் இருந்த மாணவர்களுக்கான வருகை பதிவேடு திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அத்துறையின் தலைவர் பொருளாதாரத்துறையில் பயிலும் மாணவர்களிடமும் தங்களுக்கு இண்டர்னல் தேர்வு மதிப்பெண் அளிக்க மாட்டேன் எனக்கூறி வருவதோடு, தேர்வு எழுதவும் அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறியதோடு, வருகை பதிவேடு காணாமல் போனதற்காக ஒவ்வொரு மாணவர்களிடமும் 1500 ரூபாய் அபராத தொகையாக செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துவதோடு அதற்கான ரசீது எதுவும் கல்லூரி நிர்வாகம் சார்பாக வழங்கவில்லை எனவும், மேலும் அபராத தொகை செலுத்தாதவர்களை வகுப்பில் அனுமதிக்காமல் இருப்பதாக கூறியும் அக்கல்லூரி பொருளாதார துறையின் மதிய நேர பிரிவு மாணவர்கள் துறைத்தலைவரை கண்டித்து கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பொருளாதார பிரிவு துறைத்தலைவர் மீது கோபத்துடன் சில பேராசிரியர்கள் சிலரின் தூண்டுதலால் தவறான குற்றச்சாட்டுகளை கூறி மாணவர்களை தூண்டிவிடுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காமராசர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பொருளாதார துறை மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.