நமது உணவுப் பட்டியலில் தயிருக்கு முக்கிய இடம் தரப்படுகிறது. தயிர் சாதம் எளிதில் செரிமானமாகாது என்பதால் அதை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இரவு நேரம்தான் உடலுறுப்புகள் ஓய்வெடுத்துக் கொள்ளும் என்பதால் எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுவதே சிறந்ததாக இருக்கும். தயிர் சாதத்தை இரவில் சாப்பிடும்போது தலைவலி, ஜலதோஷம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.