மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் எலைட் மகாலிங்க நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் சீமான், மதுரை காளவாசல் பகுதியில் உள்ள ஹோட்டல் தங்கம் கிராண்டில் இருந்தும் புறப்பட்டபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
ஆதாரமில்லாத அவதூறு வழக்கு இது. நீண்ட நாட்களாக இருந்து வரக்கூடிய ஒரு தொல்லை இது 14 ஆண்டு வருடமாக நீடித்து வருகிறது. இந்த இடைக்காலர் தடையை நான் வரவேற்கின்றேன்.
கம்யூனிஸ்ட் கட்சி என்பது தற்போது கார்ப்பரேடாக மாறிவிட்டது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு , பள்ளி மாணவி மரணம் வழக்கு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாலியல் பிரச்சனைகள் குறித்து பாலியல் பேசாத கம்யூனிஸ்ட் கட்சி எனக்கு அவப்பேரு ஏற்படுத்தி என்னை இழிவை சுமத்த வேண்டும் என்கின்ற நோக்கம்தான் உங்களது நோக்கம்.
தாத்தா ஜீவானந்தம் சங்கர் ஐயாவோடு கம்யூனிஸ்ட் செத்துப் போச்ச. எம் ஜிஆர் , ஜெயலலிதா , கருணாநிதி இருந்தபோது பெற்ற விழுக்காடை விட தற்போது ஆறு இடங்களில் தான் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளனர்.
கம்யூனிஸ்ட் தலைவர்களை எனக்கு பிடிக்கும் ஆனால் தற்போது அவர்களுடைய செயல்பாடுகள் தான் பிடிக்கவில்லை என்றார்.