சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் துணைவியார் லதா ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மதுரையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத்தினர் மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கும் இரட்டை விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்த பிறகு ரஜினிகாந்த் தம்பதியினருடன் நீடூடி வாழ தேங்காய் உடைத்தனர். பிறகு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் வெற்றிலை மாலை துளசி மாலை உள்ளிட்டவைகளை பெருமாளுக்கு சாட்சியாக சிறப்பு பூஜைகள் செய்த பிறகு கோவில் அருகே பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் துணைவியார் நீடூடி வாழ வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து அங்கே வந்த பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பேசும்போது, திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் ரஜினிகாந்த் உடைய துணைவியார் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவர் நீடூடி வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் மதுரையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் இன்று சிறப்பு பூஜைகள் செய்திருக்கின்றோம். 1996 இல் எவ்வாறு குரல் கொடுத்தாரோ அதேபோன்று வரும் தேர்தலிலும் அவர் குரல் கொடுப்பாரேயானால் நிச்சயம் நாங்கள் தேர்தலுக்காக பணி செய்ய தயார் என்றனர்.