வேப்பனஹள்ளி - Veppanahalli

குருபரப்பள்ளி: மனைவியை மீட்டு தர கணவன் போலீசில் புகார்

குருபரப்பள்ளி: மனைவியை மீட்டு தர கணவன் போலீசில் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சாமந்தமலையை சேர்ந்தவர் மாது. இவருடைய மனைவி அம்சா(40) சாமந்தமலை அரசு பள்ளியில் சத்துணவு ஊழியராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அம்சா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை இதனால் அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் இல்லாததால் இதுகுறித்து கணவர் மாது குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் போச்சம்பள்ளி அருகே உள்ள மல்லிக்கல் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(35) என்பவருக்கும் எனது மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்தது. அவர் எனது மனைவியை கடத்திச் சென்று விட்டார். இதனால் அவரிடமிருந்து எனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி