போச்சம்பள்ளியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

73பார்த்தது
போச்சம்பள்ளியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சைபர் குற்றங்களை தடுப்பது குறித்தும், வங்கி ஏ. டி. எம். பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி, வணிக கடைகள் மற்றும் வீடுகளுக்கு சிசிடிவி பொருத்துவது குறித்தும் பர்கூர் டி. எஸ். பி. முத்துகிருஷ்ணன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் இன்று(அக்.5) நடைபெற்றது. போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகராணி குற்றங்களை தடுப்பது குறித்து பொது மக்களுக்கு விளக்கி எடுத்துரைத்தார். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி