கிருஷ்ணகிரி: இயற்கை பேரிடர்களை தடுக்க பெண் நடைபயணம்

64பார்த்தது
கிருஷ்ணகிரி: இயற்கை பேரிடர்களை தடுக்க  பெண் நடைபயணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரைச் சேர்ந்தவர் முத்துராஜ், இவரது மனைவி சிவஜோதி (42). இயற்கை ஆர்வலரான இவர் ஆந்திர மாநிலதை பூர்விகமாக கொண்ட இவர் திருமணத்திற்கு பின்னர் பாகலூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் சிவஜோதி நேற்று பாகலூரில் இருந்து சென்னை நோக்கி 'எமர்ஜென்சி ஃபார் எ நியூ பிரீட்' என்ற வாசகங்களைக் அடங்கிய கொண்ட பதாகை ஒன்றை கையில் ஏந்தியபடி தனிநபராக நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

இயற்கை பேரிடர் மற்றும் சென்னை பெருவெள்ளம் போன்றவற்றை தடுக்க தன்னிடம் தீர்வு உள்ளதாக கூறிய அவர் முதல்வரை நேரில் சந்தித்து தனது திட்ட அறிக்கைகளை கொடுக்க உள்ளதாக சிவஜோதி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி