வேப்பனஹள்ளி - Veppanahalli

பண்ணந்தூர் சித்தர் கோவிலில் சோமவார பிரதோஷம் சிறப்பு பூஜை

பண்ணந்தூர் சித்தர் கோவிலில் சோமவார பிரதோஷம் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத இரண்டாவது திங்கட்கிழமை சோமவார பிரதோஷம் முன்னிட்டு இன்று செப்-30ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் சித்தர் கோவிலில்சித்தர் பெருமானின் லிங்கத் திருமேனிக்கும் நந்தி தேவருக்கும் வாசனை பால். சந்தனம் பன்னீர், உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதனை காண்பிக்கபட்டது. இதில் திரளான பக்கதர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிச னம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கபட்டது. பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்வது சிறப்பு.

வீடியோஸ்