அரவக்குறிச்சி - Aravakurichi

அனுமதி இன்றி சேவல் சண்டை நடத்திய மூன்று பேர் கைது.

அனுமதி இன்றி சேவல் சண்டை நடத்திய மூன்று பேர் கைது.

அனுமதி இன்றி சேவல் சண்டை நடத்திய மூன்று பேர் கைது. இரண்டு சேவல்கள் பறிமுதல். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, புன்னம் சத்திரம் பகுதியில் சேவல் சண்டை நடத்துவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் க்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 17ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், புன்னம் சத்திரம் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அருகில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு முள் தோட்டத்தில் சேவல் சண்டை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சட்ட விரோத சேவல் சண்டையில் ஈடுபட்ட மேலபாளையத்தை சேர்ந்த ரமேஷ், அருகில் உள்ள குட்டக்கடை பகுதியைச் சேர்ந்த குமார், ஆத்தூர் பிரிவை சேர்ந்த சசிகுமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, சேவல் சண்டை நடத்த பயன்படுத்திய இரண்டு சேவல்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

வீடியோஸ்


వికారాబాద్ జిల్లా