கரூர் மாவட்டம், சுக்காலியூர் அருகே உள்ள பண்டுதகாரன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி அருக்காணி வயது 90.
இவருக்கு அண்மைக்காலமாக மூச்சு திணறல் மற்றும் முழங்கால் வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் விரக்த்தி அடைந்த அவர் பிப்ரவரி 14-ஆம் தேதி காலை 6 மணி அளவில் அவர் வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகளை அதிகப்படியாக உட்கொண்டு உள்ளார்.
இதனால் அருகில் உள்ள கருப்பசாமி என்பவரது வீடு அருகே மயங்கி கீழே விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து அங்கு சிகிச்சையில் இருந்து வந்த மூதாட்டி அருக்காணி சிகிச்சை பலனின்று நேற்று பிப்ரவரி 19ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்த அருக்காணியின் மகன் ராமசாமி வயது 64 என்பவர், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த அருக்காணியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறையினர்.