பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து முதியவர் படுகாயம்.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, காருடையபாளையம் அருகே குரங்காட்டுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 65.
இவர் பிப்ரவரி 16ம் தேதி இரவு 7: 40- மணியளவில், கரூர் - கோவை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்க நல்லி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது,
எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் ஒன்று, நடந்து சென்ற சுப்பிரமணி மீது மோதி விபத்து ஏற்பட்டது. தலையில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த சுப்பிரமணியின் மகன் மோகன்ராஜ் வயது 48 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற சென்று அந்த வாகனம் எது?
அந்த வாகனத்தின் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க. பரமத்தி காவல்துறையினர்.