கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பி. வெள்ளாளப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக, காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பிப்ரவரி 15ம் தேதி மாலை 5 மணி அளவில் பி. வெள்ளாளப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அருகிலுள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், கருப்பத்தூர், அரிஜன தெருவை சேர்ந்த ரஞ்சித், லாலாபேட்டை, காமராஜர் தெருவை சேர்ந்த சந்தோஷ் குமார், அருகிலுள்ள பிள்ளாபாளையம் தெற்கு தெருவை சேர்ந்த கதிரவன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ. 200 பறிமுதல் செய்தனர்.
பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.