பாலதுரை அருகே ரத்த புற்று நோயால் பேரன் இறந்ததால் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்த முதியவர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள பாலத்துறை
கே. தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மயில்ராஜ் வயது 65.
இவரது பேரன் சந்தோஷ் கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி ரத்த புற்றுநோயால் உயிரிழந்தார்.
அது முதல் விரக்தியோடு வாழ்ந்து வந்த மயில்ராஜ், பிப்ரவரி 17ஆம் தேதி காலை 6: 30 மணி அளவில் விரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை அறிந்த மயில்ராஜின் மனைவி இந்திராணி வயது 58 என்பவர், தனது கணவனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து இந்திராணி அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த மயில்ராஜின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.