சின்னதாராபுரம்-மாசாணி அம்மன்கோயில் பூக்குழிதிருவிழா

51பார்த்தது
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே சூடாமணி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். 27 ஆம் ஆண்டு பூக்குழி (குண்டம்) திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. 

அதைத் தொடர்ந்து, நாள்தோறும் மாசாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று எல்லமேடு சக்தி விநாயகர் ஆலயத்திலிருந்து அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக வந்து குழந்தைகளுடன் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் பூக்குழியில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

பூக்குழி நிகழ்ச்சியைக் காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஸ்ரீ மாசாணி அம்மன் அறக்கட்டளை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி