![](https://media.getlokalapp.com/cache/7b/a8/7ba863731ae6ba70fdbfdd7a7b7e459c.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
வீட்டின் பின் கதவை உடைத்து 5-பவுன் தங்க நகை கொள்ளை.
ஸ்ரீரங்க கவுண்டனூரில் வீட்டின் பின் கதவை உடைத்து 5-பவுன் தங்க நகை கொள்ளை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஸ்ரீரங்ககவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் விஜயகுமார் வயது 50. இவர் மே மாதம் 16ஆம் தேதி காலை 9 மணி அளவில், திருப்பூரில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். பிறகு மீண்டும் ஜூலை 8-ம் தேதி இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு, அத்துமீறி யாரோ உள்ளே நுழைந்து, பீரோவில் வைத்திருந்த ஐந்து பவுன் தங்க நகையை களவாடி சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தங்க நகையை களவாடி சென்ற மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்.