அரவக்குறிச்சி - Aravakurichi

சேமங்கி மாரியம்மன் ஆலயத்தில் தேரோட்டம்

கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் வேட்டமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சேமங்கி மாரியம்மன் திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்து, கிராம பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாரியம்மன் தேரோட்டம் ஏப்ரல் 30ஆம் தேதி இரவு விமர்சியாக துவங்கியது. சேமங்கி சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தேர் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை மே 1ம் தேதி புதன்கிழமை கிடா வெட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து இன்னிசை கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை சேமங்கி மாரியம்மன் ஆலய விழா குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


వికారాబాద్ జిల్లా