விடுமுறை நாள்: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

53பார்த்தது
சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முக்கடல் சங்கமத்தில் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கூடினர். கேரள சுற்றுலா பயணிகள் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் அதிக அளவில் வந்திருந்தனர். சூரிய உதயத்தை பார்த்து மகிழ்ந்த பின்னர். படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு உற்சாக பயணம் செய்து திரும்பினர்.

        மேலும் பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, வட்டக்கோட்டை, மாத்தூர் தொட்டிப்பாலம் மற்றும் சுற்றுலா மையங்கள் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் களைகட்டி காணப்பட்டது. திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டும் நிலையில் அங்கு கடந்த இரு நாட்களாக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடினார்.

    குறிப்பாக இன்று (22-ம் தேதி) காலை முதலே  இருந்தே குலசேகரத்தில் இருந்து திற்பரப்பு அருவி வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் சென்றன. பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திற்பரப்பில் திரண்டனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் இன்று குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி