உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை நுழைவு கட்டணமின்றி இன்று (சனிக்கிழமை) சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம். தொல்லியல் துறை அறிவிப்பு! உலக மகளிர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
இதனால் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டணமின்றி புராதன சின்னங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம். குறிப்பாக, மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணி நபர் ஒருவருக்கு 40 ரூபாய் கட்டணமாக தொல்லியல் துறை வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இலவச அனுமதியை முன்னிட்டு இன்று (சனி) ஒரு நாள் மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு ஆகிய பகுதிகளில் உள்ள நுழைவு கட்டண மையம் மூடப்பட்டிருக்கும் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.