100 கிடாய்கள் வெட்டி நடந்த கறி விருந்து!

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழனில் 200 ஆண்டுகள் பாரம்பரிய கந்தூரி விழாவில் 100 கிடாய்கள் வெட்டி கறி விருந்து நடந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கறி விருந்திற்காக படைக்கப்பட்ட கிடாய்களின் தலைகள், குடல்கள், ஈரல்கள், தோல்கள் மற்றும் கால்கள் ஆகியவை பாரம்பரிய கந்தூரி விழா நிகழ்ச்சி முறைப்படி ஏலம் விடப்பட்டன. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி