ஆதார் அட்டை பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

85பார்த்தது
ஆதார் அட்டை பயன்படுத்துவோர் கவனத்திற்கு!
ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 14 ஆம் தேதி கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது டிசம்பர் 14 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பான் கார்டு விண்ணப்பிக்க மற்றும் வருமான வரி தாக்கல் செய்ய இனி ஆதார் பதிவு ஐடியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி