பழனி
கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்
கொடைக்கானலுக்கு ரமலான் பண்டிகை முடிந்துஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். மன்னவனூர், பூம்பாறை, வெள்ளி நீர்வீழ்ச்சி, குணா குகை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நீண்ட வரிசையில் சாலையில் தேங்கியுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து சரி செய்யப்படாததால் சுற்றுலா பயணிகள் நடந்து செல்கின்றனர். போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.