
பழனி நான்கு வழிச் சாலையில் வழிப்பறி
திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடி பகுதிக்கு டூவீலரில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஊத்துக்குளியை சேர்ந்த கார்பெண்டர் ராதாகிருஷ்ணன் (53) வந்தார். நான்கு வழிச்சாலையில் ஊருக்குச் செல்ல எருமநாயக்கன்பட்டி அருகே வரும்போது டூவீலரில் வந்த இருவர் பழநிக்கு வழி கேட்பதாக நடித்து ஒன்றரை பவுன் செயினை பறித்துச் சென்றனர். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.