ஒட்டன்சத்திரம் - Oddanchatram

மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து 30 அணிகள் பங்கேற்பு. திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் கபாடி கழகத்துடன் இணைந்து திண்டுக்கல் மேட்டுப்பட்டி சோழன் பாய்ஸ் கபாடிக்குழு சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் மகளிர் கபாடி தொடர் போட்டி சனிக்கிழமை காலை 10. 30 மணியளவில் தொடங்கியது. இதில் தமிழகத்தில் இருந்து முப்பதுக்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன நாக்அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியினை ஏடிஎஸ்பி தெய்வம் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி, கோவை , மதுரை, தென்காசி, சிவகங்கை, ஒட்டன்சத்திரம், நத்தம் , வீராணம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் இப் போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூபாய் 10 ஆயிரம் ரொக்கப் பரிசாகவும் இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூபாய் 7000, மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூபாய் ஐந்தாயிரம் என ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டியினை சோழன் பாய்ஸ் கபடி குழு ஏற்பாடு செய்திருந்தது.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా