ஒட்டன்சத்திரம் - Oddanchatram

10 ஆண்டுக்கு பிறகு தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாங்கரை அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10 வருடங்களுக்கு பிறகு அதி விமர்சையாக கொண்டாடப்பட்டது கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருவிழா நடத்தப்பட்டது இதை அடுத்து கோவில் புனரமைப்பு பணி மற்றும் கும்பாபிஷேகம் காரணமாக 10 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்தது இதை அடுத்து கோவில் பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் ஊர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 9ம் தேதி செவ்வாய்க்கிழமை ஊர் கூட்டம் கூட்டி அம்மனிடம் உத்தரவு கேட்டு சாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது இதை அடுத்து 16ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு அம்மன் கரகம் எடுத்து திருவிழா துவங்கியது புதன் கிழமை அதிகாலை காலை மாவிளக்கு முளைப்பாரி எடுத்து பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக நூற்றுக்கணக்கானபக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் அங்கப்பிறதசனம் செய்து கிடா வெட்டியும் பொங்கல் வைத்து வேண்டுதல்களை நிறைவேற்றினர் இதையடுத்து வியாழக்கிழமை மாலை அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வும் நடைபெறுகிறது இந்த உற்சவ விழா ஏற்பாட்டினை மாங்கரை ஊர் பெரியோர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர் திருவிழாவில் கரகாட்டமும் புதன்கிழமை இரவு வள்ளி திருமணம் நாடகமும் வியாழக்கிழமை கிராமிய கலை நிகழ்ச்சிகளும் வானவேடிக்கையும் நடைபெற்றது.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా