வேடசந்தூர் - Vedasandur

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்!

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்!

வடமதுரை அருகே சுக்காம்பட்டி களத்தூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(55). இவரது வீட்டின் அருகே வாசிப்பவர் சினேகா. இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்னை இருந்து வந்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு வேடசந்தூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் லட்சுமி தனது வீட்டின் முன்னால் கழிவறை கட்டுவதற்காக தகர சீட்டுகளை வைத்துள்ளார். இதனை சினேகா மற்றும் அவரது குடும்பத்தினர் தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட போது தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக லட்சுமி வடமதுரை போலீசில் புகார் கொடுத்தார். சப். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தார்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా