லாரி மீது வால்வோ பேருந்து மோதிய விபத்தில் பயணிகள் காயமடைந்தனர். தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கோதூர் பைபாஸில் இந்த விபத்து நடந்துள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது தனியார் வால்வோ பேருந்து மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் கடும் சேதமடைந்தது. ஓட்டுநர் மற்றும் பல பயணிகள் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.