
திண்டுக்கல்: கோழி நிறுவனத்தில் ரூ. 46 லட்சம் கையாடல்
திண்டுக்கல் ஒய். எம். ஆர். பட்டியை சேர்ந்த ஜெயசீலன் கறிக்கோழிகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் நிறுவனத்தை நடத்துகிறார். இங்கு திருப்பூரை சேர்ந்த பிரசாத் ஊழியராக வேலை செய்தார். இவர் ஜெயசீலன் கூறிய முகவரிக்கு கோழிகளை அனுப்பாமல் தனக்கு தெரிந்த மதுரை மேலுார், விராலிமலையை சேர்ந்த இருவருக்கு அனுப்பி அதன்மூலம் ரூ. 46 லட்சத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவானார். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.