ஆத்தூர் - Athoor

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள அறிஞர் அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரிமுருகேசன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் அருள்கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பாஸ்கரன் கலந்து கொண்டார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன் வரவேற்று பேசினார். தீர்மானங்களை அலுவலக உதவியாளர் சுரேஷ் வாசித்தார். திருக்குறள் வாசித்த பின்பு கூட்டம் தொடங்கியது. முதல் சிறப்பு தீர்மானமாக ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன் கொண்டு வந்த கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மூலம் 8லட்சம் வீடுகள் கட்டப்படுவதற்கு நன்றி தெரிவித்தும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களை பாராட்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் மகேஷ்வரி முருகேசன் கொண்டு வந்த தீர்மானமும், தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற வைத்த திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களை பாராட்டி கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 31 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நிறைவாக வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்கலாவதி நன்றி கூறினார்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా