நிலக்கோட்டை - Nilakottai

கொடைக்கானல்: சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா 2025 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக பல்வேறு பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: - கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் 100 வாகனங்கள் நிறுத்தும் வகையில் நகராட்சித்துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒருவார காலத்தில் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்சர்வேட்ரி, ரோஸ் கார்டன் எதிர்புறம், பிரையண்ட் பார்க் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோர வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலியான இடங்களில் தற்காலிக சாலையோர வாகனம் நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திருநாவுக்கரசு, கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சத்யநாதன், துணை காவல் கண்காணிப்பாளர் மதுமிதா, கொடைக்கானல் வட்டாட்சியர் பாபு, உதவி இயக்குநர்(நெடுஞ்சாலைத்துறை) ராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்கள்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా