அரூர் - Harur

தர்மபுரி: முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

தர்மபுரி செட்டிக்கரையில் அதிமுக தருமபுரி வடக்கு தெற்கு ஒன்றிய செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று(அக்.17) இரவு நடைபெற்றது. எம்எல்ஏ கோவிந்தசாமி ஏற்பாட்டிலும் தருமபுரி தெற்கு நீலாபுரம் செல்வம் ஏற்பாட்டிலும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கழக வளர்ச்சி குறித்தும் மக்கள் பணிகள் குறித்தும் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகளிடம் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பேசினர். முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பேசும்போது மக்களின் மீது அக்கறை கொண்ட ஒரே இயக்கம் அதிமுக தான் என்றும் மக்களுக்கு தேவையான திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தியது அதிமுக தான் எனவும் திமுக தேர்தல் வாக்குறுதி கண்டு மக்கள் ஏமாற்றம் அடைந்தனர் எனவும் தெரிவித்தார். அதனையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் அதிமுக இன்று 53வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் 31 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளது எனவும். திமுக 75 ஆண்டுகாலத்தில் 25 ஆண்டுகள் மட்டுமே கூட்டணி ஆட்சி நடத்தியுள்ளது எனவும், திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத்திற்கு மாதம் ஆயிரம் தந்து 10 ஆயிரம் கூடுதல் செலவை ஏற்படுத்தியது ஸ்டாலின் அரசு என தெரிவித்தார்.

வீடியோஸ்


தர்மபுரி