தர்மபுரி: மாவட்டத்தில் குட்கா, மது விற்றதாக 33 வழக்குகள் பதிவு

81பார்த்தது
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில், அந்தந்த காவல் நிலையங்களுக்குட்பட்ட காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது, தர்மபுரி காவல் உட்கோட்டத்தில் குட்கா விற்றதாக 3 பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், 4 மது விற்ற வழக்கு, 1 சூதாட்ட வழக்கு, அரூரில் 2 சூதாட்ட வழக்கு, 3 குட்கா வழக்கு, 8 மது விற்ற வழக்கு, பென்னாகரத்தில் 2 குட்கா, 2 மதுவிற்ற வழக்கு, பாலக்கோட்டில் 3 குட்கா வழக்கு, 4 மது விற்ற வழக்கு, தர்மபுரி மதுவிலக்கு பிரிவு போலீசில் 1 கஞ்சா வழக்கு என மொத்தம் 33 வழக்குகள் கடந்த 10 நாட்களில் பதிவு செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது மேலும் தொடர்ந்து காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடதக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி