தர்மபுரி: பள்ளி மாணவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கிய எம்பி

85பார்த்தது
திமுக கட்சியின் 75ஆம் பவள விழா முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் புலிக்கரை அருகாமையில் அமைந்துள்ள கவலைக்காரன்கொட்டாய் அரசு ஆரம்ப பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலக்கோடு சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :