அரூர்: மழை பாதிப்பு, நிவாரணம், உதவி எண்கள் அறிவிப்பு

81பார்த்தது
அரூர்: மழை பாதிப்பு, நிவாரணம், உதவி எண்கள் அறிவிப்பு
கிருஷ்ணகிரி KRP அணையிலிருந்து வினாடிக்கு 2000 கன அடி நீர் திறந்து விட்டிருப்பதாக வரப்பெற்ற தகவலையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு அரூர் வட்டத்தில் நுழையும் பகுதியான வெளாம்பட்டி தரப்பு புதுக்காடு கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு நேரடியாக கிராமத்திற்குச் சென்று வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், ஆகியோரால் நேற்று இரவு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் வெள்ள பாதிப்பு தொடர்பான செய்திகளை தெரிவிக்கவும், நிவாரணப் பணி தொடர்பாகவும், அரூர் கோட்டத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர்களின் செல்பேசி எண்கள் கீழே கொடுக்கப்படுகிறது.

அரூர் வட்டம்
1)வருவாய் ஆய்வாளர் அரூர் 8778841912.
2)வருவாய் ஆய்வாளர் தீர்த்தமலை 6369474802.
3)வருவாய் ஆய்வாளர் மொரப்பூர் 8778171150.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்
1)வருவாய் ஆய்வாளர் பாப்பிரெட்டிப்பட்டி 8667304400.
2)வருவாய் ஆய்வாளர் கடத்தூர். 9750859828. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி