அரூர்: புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்எல்ஏ

50பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பநாயக்கன் வலசை கிராமத்தில் பல நாட்களாக பேருந்து வசதி இல்லாமல் இருந்து வந்தது. இது குறித்து அப்பகுதி மாணவ மாணவிகள் கடைசில நாட்களுக்கு முன்பு பேருந்து வசதி வேண்டி வெளியிட்ட சமூக வலைதள பதிவு வைரலாகி இருந்தது.
மேலும் மக்கள் தங்களின் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு அரூர் எம்எல்ஏ சம்பத்குமாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று அக்டோபர் 05 மாலை இக்கிராமத்திற்கு புதிய பேருந்து விடப்பட்டது. இதனை அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் துவக்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார் மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி