அரூர்: பாப்பம்பாடி ஆற்றில் நீர் நிரம்பி வழிகிறது

80பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பொழிந்து வந்தது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பொழிந்த கனமழையின் காரணமாக பாப்பம்பாடி ஆட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இன்று அக்டோபர் 7 காலை முதல் தடுப்பணை நீர் நிரம்பி வழிகிறது.

மேலும் தடுப்பணை நிரம்பி உள்ளதால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆற்றில் குளிக்கவோ அல்லது இறங்கவோ கூடாது என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது மேலும் தடுப்பணை நிரம்பி உள்ளதை அடுத்து அப்பகுதியில் ஏராளமானோர் ஆர்வமூடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி