தர்மபுரி: காலபைரவர் கோவிலில் எம்பி தலைமையில் தூய்மை பணி

84பார்த்தது
மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம் பல்வேறு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூய்மையை சேவை இயக்கத்தின் சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் தூய்மைப் படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தூய்மையே சேவை இயக்கத்தின் மூலம் இன்று காலை 10 மணிக்கு தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை பிரசித்தி பெற்ற காலபைரவர் கோவில் வளாகத்தில், பெரியார் பல்கலை கழக விரிவாக்க மைய நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களி தூய்மை பணிகளை தருமபுரி மக்களவை உறுப்பினர் ஆ. மணி தொடங்கி வைத்து, மாணவர்களுடன் கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடீபட்டனர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி கூடுதல் ஆட்சியர் கௌரவ்குமார், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி