அரூர்: கம்பைநல்லூரில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்

81பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூரில் பேரூர் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் தலைமையில், சிறப்பு விருந்தினராக முன்னாள் உயர் கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே பி அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், பேரூர் நகர செயலாளர் தனபால் ஏற்பாட்டில் நடந்தது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் அதிமுக அதிகளவு மக்கள் வெற்றி பெற வேண்டும் எனவும், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வராக அமர வைக்க பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி