விருத்தாச்சலம் - Virudhachalam

விருத்தாசலம்: கோர விபத்தில் கணவன், மனைவி பலி

விருத்தாசலம்: கோர விபத்தில் கணவன், மனைவி பலி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார், மனைவி சரிதா மகன் குரு ஆகியோருடன் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கடலூர் - விருத்தாசலம் சாலையில் சாத்தமங்கலம் அருகே திரும்பி வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து செல்வக்குமார் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியதில் செல்வக்குமார் சரிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிறுவன் குருவை அருகில் இருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவன் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோஸ்


హైదరాబాద్