கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைகண்ணு தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கொக்காம்பாளையம் கிராமத்தில் அப்பகுதியை சேர்ந்த தங்கதுரை மகன் ஐயப்பன் என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் கூழாங்கற்களை வெளியே எடுத்து சலித்து விற்பனைக்கு குவித்து வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆலடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தனர்.