பள்ளி மாணவிக்கு வளைகாப்பு செய்து ரீல்ஸ்: ஆசிரியை சஸ்பெண்ட்

68பார்த்தது
பள்ளி மாணவிக்கு வளைகாப்பு செய்து ரீல்ஸ்: ஆசிரியை சஸ்பெண்ட்
வேலூரில் செயல்படும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிலர் சக மாணவிக்கு போலியாக வளைகாப்பு செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நிகழ்வு குறித்து தலைமை ஆசிரியை விளக்கமளிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டார். விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி